தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரக்கிளையை வெட்டும்போது மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி: செய்யூர் அருகே சோகம்

 

Advertisement

செய்யூர்: செய்யூர் அருகே மரத்தின் கிளையை வெட்டும்போது மின்சாரம் பாய்ந்து மரம் ஏறும் கூலித்தொழிலாளி பரிதாபமாக பலியானார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த ஓதியூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (57). மரம் ஏறும் கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் மணி என்பவருக்கு சொந்த தென்னை மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறினார். அங்கு, கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அதில் ஒரு கிளை அவ்வழியாக இருந்த மின்கம்பம் மின்வயர் மீது விழுந்த நிலையில், சேகர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில், அவர் மரத்தில் தொங்கியவாறு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அப்பகுதி மின் விநியோகத்தை துண்டித்து, மரத்தில் சடலமாக இருந்தவரை மீட்டனர். தகவலறிந்து வந்த செய்யூர் போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News