தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

11 அடி உயர முனீஸ்வரர் சிலைக்கு கும்பாபிஷேகம்: கிராம மக்கள் பெருந்திரளாக தரிசனம்

 

திருத்தணி, ஜூலை 14: திருத்தணி அருகே, எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் எல்லையம்மன் குளக்கரையில் புதிதாக முனீஸ்வரருக்கு 11 அடி உயரத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலையைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு யானை மற்றும் குதிரை வாகனங்கள் மற்றும் பச்சையம்மன் சிலைக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முனீஸ்வரர் சிலைக்கு கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்றது.

விழாவையொட்டி, யாகசாலைகள் அமைக்கப்பட்டு விநாயகர் பூஜை, கோ பூஜை, நவகிரக பூஜை, பூர்ணாஹுதி உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை மகாபூர்ணாஹூதியை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோயில் அர்ச்சகர் கண்ணையன், பரணி கார்த்திகேயன் குருக்கள், சுகுமார் சிவாச்சாரியார்கள் ஆகியோர் முனீஸ்வரருக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து, இதர பரிகார தேவதைகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. எஸ்.அக்ரஹாரம் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் பெண்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. எஸ்.அக்ரஹாரம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Related News