தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குலசை, செட்டியாபத்து கோயில்களில் ஜூன் 8ல் கும்பாபிஷேக விழா

 

Advertisement

உடன்குடி, மே 31: குலசேகரன்பட்டினம், செட்டியாபத்து கோயில் கும்பாபிஷேக விழா, வரும் ஜூன் 8ம் தேதி நடக்கிறது. இதில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட செட்டியாபத்து சிதம்பரேஸ்வர் கோயில் மகா கும்பாபிஷேக விழா, ஜூன் 8ம் தேதி நடக்கிறது. வரும் 5ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கி 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடக்கிறது.

இதற்கான அழைப்பிதழை மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோயில் அறங்காவலர் குழு தலைவர் மகேஷ்வரன் வழங்கினார். அப்போது கோயில் செயல்அலுவலர் பால முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர் சுமேந்திர பிரகாஷ், கோயில் எழுத்தர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுடன் இணைந்த கடற்கரையில் உள்ள சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோயிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 8ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இந்த இரு கும்பாபிஷேக நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு மற்றும் அறநிலைய துறை அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

Advertisement

Related News