தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புள்ளம்பாடி அடுத்த ஆலம்பாக்கம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

 

லால்குடி, ஜூன் 30: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை அடுத்த ஆலம்பாக்கம் கிராமத்தில் மெஞ்ஞானவிநாயகர், நாகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து தொடர்ந்து மங்கள இசை, விக்னேஸ்வரபூஜை, முதல் காலை இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

நேற்று காலை கடம் புறப்பாடு செய்து 10 மணியளவில் ஆலயங்களின் அனைத்து விமான கலசத்திற்கும், பின்னர் கருவறை மூலஸ்தானத்திற்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து அனைவருக்கும் தீபாராதனையுடன் பிரசாதமும் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி ரவிச்சந்திரன், ஸ்தபதி செல்வகுமார், கிராம மற்றும் சுற்றுவட்டார முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கு பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பட்டையதாரர்கள், திருப்பணி குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related News