தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயான பாதை ஆக்கிரமிப்பால் மக்கள் பரிதவிப்பு

போச்சம்பள்ளி, செப்.30: போச்சம்பள்ளி அருகே, மயான பாதைய அழித்து, விவசாய பயன்பாட்டிற்கு ஆக்கிரமித்தால், சடலங்களை அடக்கம் செய்ய வழியின்றி மக்கள் தவிப்பில் இருந்து வருகின்றனர்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாப்பானூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள அரசு நிலத்தை பல வருடமாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிங்கல் கதிரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது விளை நிலத்திற்கு வழி இல்லாத காரணத்தால் மயானத்தை அழித்து பாதை அமைத்துள்ளார். இதனால், மயானத்திற்கு சடலங்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் காலம் காலமாக அரசு நிலத்தை மயானமாக பயன்படுத்தி வந்தோம். ஆனால், தனி நபர் ஒருவர் அவரது நிலத்திற்கு செல்ல வசதியாக மயான பாதையை ஆக்கிரமித்துள்ளார். எனவே, மயானமாக பயன்படுத்தி வந்த இடத்தை மீண்டும் எங்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றனர்.இதுதொடர்பாக போச்சம்பள்ளி தாசிலதார் சத்யாவிடம் கேட்டபோது, மயானத்தை தாண்டி 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாதை தேவை. இதை அமைத்து கொடுத்த நிலையில், கிராம மக்களுக்கு மயானம் அமைத்து கொடுக்க வேண்டியது எங்களின் பொறுப்பு. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement