தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்டத்தில் 31 மையங்களில் 11,039 பேர் எழுதுகின்றனர்

கிருஷ்ணகிரி, செப்.27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை (28ம் தேதி) நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் -2, 2ஏ (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குரூப் 2, 2 ஏ-க்கான கொள்குறி வகை (ஓஎம்ஆர்) தேர்வு நாளை (28-ம் தேதி) நடைபெற உள்ளது. 31 தேர்வு கூடங்களில் நடைபெறும் தேர்வினை 11,039 பேர் எழுத உள்ளனர். தேர்வு பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் நிலையில், 3 பறக்கும் படை அலுவலர்கள், ஒவ்வொரு வட்டத்திலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அலுவலர்கள், 11 நடமாடும் அலகு அலுவலர்கள், 31 ஆய்வு அலுவலர்கள் மற்றும் 31 வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வர்களுக்கு தேர்வுக் கூடங்களில் அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சாரம் வழங்கவும் மற்றும் சிறப்பு பேருந்து வசதிகள் தொடர்புடைய துறைகள் மூலம் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் அனுமதி சீட்டில் (ஹால் டிக்கெட்) குறிப்பிட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வுக்கூடங்களுக்கு காலை 8.30 மணிக்குள் வரவேண்டும். தாமதமாக வருபவர்களை தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்க இயலாது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உத்தரவுகளை தேர்வர்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும், என்றார். இக்கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தமிழ்நாடு அரசு தேர்வாணைய பிரிவு அலுவலர் ராஜ்குமார், உதவி பிரிவு அலுவலர்கள் கேசவ பெருமாள், சவுந்தரராஜன் உள்ளிட்ட துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement