தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மல்லிகைப்பூக்கள் விலை அதிகரிப்பு

காவேரிப்பட்டணம், நவ.25: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், திம்மாபுரம், டேம்ரோடு, அவதானப்பட்டி, மலையாண்டஹள்ளி, போத்தாபுரம், ஜெகதாப், பெண்ணேஸ்வர மடம், நரிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 6 ஆயிரம் ஏக்கரில் குண்டுமல்லி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பூக்களை கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது மல்லிகைப் பூ சீசன் துவங்கியுள்ள நிலையில், தினமும், 50 டன் அளவிற்கு அறுவடை செய்யப்படுகிறது. காலை நேரத்தில் அறுவடை செய்யும் பூக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், தற்போது ஒரு கிலோ ரூ.1000 வரை விற்பனையாகிறது.

Advertisement

தற்போது பனிக்காலம் தொடங்கி, பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகி வருகிறது. இதனால், பூக்களின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து இருபோக நெல் சாகுபடிக்கு போதிய அளவு நீர் இருந்தும், நெல் சாகுபடியில் போதிய வருமானம் கிடைக்காததால், பணப்பயிரான மல்லிகை சாகுபடிக்கு அதிகளவு விவசாயிகள் மாறியுள்ளனர். பண்டிகை காலங்களில் ஒரு கிலோ ரூ.2500 வரை விற்பனை ஆகிறது. காலையில் அறுவடை செய்யும் மல்லிகை பூக்கள் விமானம் மூலம் அனுப்பபட்டு டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டிற்கும், வெளிநாடுகளான சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளில் அன்று மாலையே விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் மாலையில் அறுவடை செய்யும் பூக்களை, ரூ.100 முதல், 150 வரை மட்டுமே வாங்குவதால் அறுவடை செய்யும் கூலி கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக காலையில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மல்லிகைப்பூ அறுவடை மற்றும் விற்பனை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் விவசாயிகள் மல்லிகைப்பூக்களை விற்பனை செய்ய முடியாமலும், போதிய விலை கிடைக்காமலும் கவலையில் உள்ளனர். எனவே, பூக்களை சேமித்து வைக்க அரசு குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் எனவும், நறுமண தொழிற்சாலை அமைக்கவும், மல்லிகை பூக்களை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News