தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்கள் பற்றாக்குறையால் ராகி அறுவடை பாதிப்பு

தேன்கனிக்கோட்டை, நவ.25: தேன்கனிக்கோட்டையில் ராகி அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், அஞ்செட்டி பகுதியில் பிரதான பயிராக ராகி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் ஊடுபயிராக சோளம், கடுகு, அவரை, துவரை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். ஆடி பட்டத்தில் விதைத்த ராகி, தொடர்ந்து பெய்த மழையால் செழித்து வளர்ந்து, தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக ராகி அறுவடை நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது மழை பெய்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அறுவடை பணி பாதிப்படைந்துள்ளது. மேலும் கூலிக்கு ஆட்கள் கிடைக்காததால் அறுவடையை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். ராகி வயலில் ஊடுபயிர் விதைத்துள்ளதால் இயந்திரம் வைத்தும் அறுவடை செய்ய முடியதில்லை.

Advertisement

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், தளி அருகே ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளன. இதனால் ராகியை விரைவில் அறுவடை செய்ய மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். ஆனால், ரூ.700 வரை கூலி உயர்ந்துள்ள நிலையில், ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ராகி பயிர் செய்துள்ள விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தால் கூட, ராகி வீட்டிற்கு வந்து சேர்வது சிரமமாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்வதால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

Advertisement

Related News