டெம்போ டிரைவர் தற்கொலை
கிருஷ்ணகிரி, அக்.25: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த கங்கோஜிகொத்தூரை சேர்ந்தவர் பாலாஜி (28). டெம்போ டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. மதுஅருந்தும் பழக்கம் இருந்ததால், அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த பாலாஜி, கடந்த 21ம் தேதி விஷத்தை குடித்து வீட்டில் மயங்கினார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement