பிளஸ்1 மாணவி கடத்தல்: வாலிபர் மீது புகார்
ஊத்தங்கரை, ஆக.22: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை அடுத்த அத்திப்பாடியை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமி, கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதில், அத்திப்பாடி அம்பேத்கர் நகரை சேர்ந்த புருசோத்தமன்(19) என்பவர், ஆசை வார்த்தை கூறி தங்களது மகளை கடத்திச்சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும், அவரிடமிருந்து மகளை மீட்டு தர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் எஸ்ஐ சரவணன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
Advertisement
Advertisement