தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மலைப்பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு

வேப்பனஹள்ளி, அக். 14: வேப்பனஹள்ளி மற்றும் சுற்றப்புற கிராமங்கள் பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதன் காரணமாக இப்பகுதியில் வழக்கமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். கடந்த ஒரு வாரமாக இப்பகுதி முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மார்கண்டேயன் ஆறு, குப்தா ஆறு, ஆந்திர மாநிலம் ஓ.என்.கொத்தூர் ஏரி, வேப்பனஹள்ளியை ஒட்டியுள்ள துணை ஆறு ஆகிய பகுதிகளில் வெள்ளம் வர தொடங்கியுள்ளது. மேலும் வனப்பகுதியில் உள்ள திடீர் நீரூற்றுகளும் தோன்றி நீர் வழிந்தோடி வருகிறது. இதன் காரணமாக வயல்வெளிகளிலும் நீர் தேங்கியுள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றில் அடித்து வரப்படும் மீன்களை உண்பதற்கும், இரையைத் தேடி வனப்பகுதியிலிருந்து கிராமப்புறங்களுக்கு ஏராளமான மலைப்பாம்புகள் ஊருக்குள் வருகின்றன. இவைகள் மீன்கள் மட்டுமின்றி, பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகள், கோழிகள் மற்றும் நாய்களையும் கவ்வி சென்று விடுகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகள் மற்றும் கோழிகள் மலைப்பாம்புகளுக்கு இரையாவதால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement