தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏரியில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்

ஓசூர், செப்.14: சூளகிரி அருகே, பிள்ளைக்கொத்தூர் ஏரியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளைக்கொத்தூர் கிராமத்தில் உள்ள ஏரி, காமன்தொட்டி மற்றும் அப்பகுதியில் உள்ள பாசன தேவை, குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியில் டன் கணக்கில் மீன்கள் திடீரென செத்து மிதந்து வருகிறது. செத்து கிடக்கும் மீன்களால் ஏரி பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிரானைட் தொழிற்சாலை கழிவுகள், கால்வாய் மூலம் ஏரியில் வெளியேற்றுவதே மீன்கள் உயிரிழக்க காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கிரானைட் தொழிற்சாலையின் கழிவுகளை சுத்திகரிக்காமல், தேக்கி வைத்து, மழைக்காலங்களில் கால்வாய்கள் மூலம் ஏரியில் வெளியேற்றுவதால், ஏரியில் உள்ள மீன்கள் இறந்து விடுகிறது. சில சமயங்களில் கால்நடைகளும் இறந்துள்ளன. இதுகுறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு, கிரானைட் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement

Related News