தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையால் பீதி

தேன்கனிக்கோட்டை, ஆக.12: ஜவளகிரி அருகே நேற்று காலை சாலையில் ஒற்றை யானை சுற்றி திரிந்ததால், கிராம மக்கள் பீதியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக உள்ளன. அதில் சில யானைகள் காட்டை விட்டு வெளியே வந்து, தினமும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், வாழை, தென்னை உள்ளிட்டவற்றை நாசம் செய்கின்றன. நேற்று காலை, தளி அருகே உள்ள ஜவளகிரி - கொலகொண்டப்பள்ளி செல்லும் சாலையில், அந்த பகுதியில் உள்ள சோலார் மின்வேலியை உடைத்துக் கொண்டு, வனத்தை விட்டு வெளியே வந்த ஆண் ஒற்றை யானை சாலையில் சாவகாசமாக நடந்து சென்றது. இதைப் பார்த்து சாலையில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பட்டாசு வெடித்து, ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டி சென்றனர். வனத்துறையினருக்கு போக்கு காட்டிய ஒற்றை யானை, அங்கும், இங்கும் சுற்றிய பின்னர், வனச்சரக சோதனை சாவடி அருகே சென்றது. அதனை பின்தொடர்ந்து சென்ற வனத்துறையினர், பட்டாசு வெடித்து காட்டிற்குள் ஒற்றை யானையை விரட்டியடித்தனர். தொடர் அட்டகாசம் செய்யும் யானையை, வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் நிரந்தரமாக விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News