ஓடும் பஸ்சில் மாரடைப்பால் முதியவர் சாவு
காவேரிப்பட்டணம், செப்.10: கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டணம் வழியாக அரசம்பட்டி நோக்கி, நேற்று பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாப்பில் அரசம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம்(70) என்பவர், அந்த பஸ்சில் பயணம் செய்தார். காவேரிப்பட்டணம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகே சென்ற போது, ராமலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். உடனே பஸ்சின் நடத்துனர் அற்புதம், ஓட்டுனர் சகாதேவன் ஆகியோர் கிருஷ்ணகிரி நகர போக்குவரத்து கழக மேலாளர் விமலன் மற்றும் காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவேரிப்பட்டணம் போலீசார், ராமலிங்கத்தின் சடலத்தை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement