தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிறுவனை கடத்தி கொன்ற 2 வாலிபர்கள் மீது குண்டாஸ்

கிருஷ்ணகிரி, ஆக.8: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் ரோஹித்(13), 8ம் வகுப்பு மாணவன். கடந்த ஜூலை 2ம் தேதி வீட்டில் இருந்து மாயமான மாணவன், மறுநாள் (3ம்தேதி) கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தான். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த முத்தண்ணன் மகன் மாதேவன்(22), கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டம் கனகபுரா அருகே உள்ள உனிசனஅள்ளியை சேர்ந்த மாரப்பா மகன் மாதேவா(21) ஆகிய 2 பேரும் சேர்ந்து, சிறுவனை கொலை செய்தது தெரியவந்தது.

கல்லூரி மாணவி ஒருவருடன், தான் நெருக்கமாக இருந்ததை மாணவன் நேரில் பார்த்து விட்டதால், வேறு யாரிடமாவது கூறி விடுவான் என்ற பயத்தில், மாதேவன் தனது நண்பருடன் சேர்ந்து சிறுவனை கொன்று உடலை 50 அடி ஆழ பள்ளத்தில் வீசியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர். இவர்களை குண்டாசில் கைது செய்ய, ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, மாவட்ட எஸ்பி தங்கதுரைக்கு பரிந்துரை செய்தார். எஸ்பி.யின் பரிந்துரையை ஏற்று, கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டதன் பேரில், மாதேவன், மாதேவா ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.