தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பேரீச்சை சாகுபடியில் அசத்தும் விவசாயி

கிருஷ்ணகிரி, ஆக.8: கிருஷ்ணகிரி அடுத்த தவளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன், தனது நிலத்தில் நெல், தக்காளி, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார். எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காததால், மாற்று பயிர் சாகுபடி செய்யலாம் என முடிவு செய்து, அரபு நாட்டில் இருந்து பேரீச்சை கன்றுகளை வாங்கி வந்து, இயற்கை விவசாயம் மூலம் அதை சாகுபடி செய்தார். நன்கு வளர்ந்த பேரீச்சை மரங்களில் இருந்து கொத்து, கொத்தாக பேரீச்சை விளைந்துள்ளது. ஒரு கிலோ பேரீச்சம் பழத்தை ரூ.150க்கு, வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நண்பரின் ஆலோசனைப்படி, அரபு நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட பேரீச்சை கன்றுகளை, ஒரு ஏக்கர் பரப்பளவில் நடவு செய்தேன். நடவு செய்த 3வது ஆண்டில் இருந்து பேரீச்சம்பழம் விளைச்சல் தருகிறது. கடந்த ஆண்டை விட தற்போது, அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு குலையிலும் 10 முதல் 20 கிலோ வரை விளைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கிலோ ரூ.150க்கு கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயாராக உள்ளனர். இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது,’ என்றார்.