சாலையை கடக்க முயன்ற லாரி டிரைவர் வாகனம் மோதி பலி
கிருஷ்ணகிரி, டிச.4: கேரளா மாநிலம், மலப்பூரா அவதாக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன்(46). லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள நாட்டாமை கொட்டாய் பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். இதற்காக சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த உன்னிகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்து வந்த காவேரிப்பட்டணம் போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement