தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

14,514 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கிருஷ்ணகிரி, நவ.15: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு 11ம் வகுப்பு பயிலும் 14,514 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து காணொலி மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

Advertisement

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பர்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் மதியழகன் எம்எல்ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல ஏதுவாக விலையில்லா சைக்கிள்கள், விலையில்லா சீருடை, புத்தகங்கள், காலணிகள் போன்றவற்றை வழங்கி வருகிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ம் வகுபபு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 வீதம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மேலும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், பள்ளி செல்ல ஏதுவாக விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் (2025 -26) மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 14,514 சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக தற்போது பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 217 மாணவிகளுக்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரத்து 920 மதிப்பிலும், பர்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலும் மொத்தம் 367 மாணவ, மாணவிகளுக்கு ரூ.17 லட்சத்து 67 ஆயிரத்து 920 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், கல்வி ஆய்வாளர் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, தாசில்தார் சின்னசாமி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News