தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரி

ஓசூர், செப்.2: ஓசூர் அருகே, சாலை தடுப்பில் லாரி மோதி விபத்துக்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிமீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கோபசந்திரம் என்னுமிடத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த ஓராண்டிற்கு மேலாக நடந்து வருகிறது. இதனால், இருபுறங்களிலும் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓசூரிலிருந்து நேற்று கிருஷ்ணகிரி நோக்கி வந்த சரக்கு லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பால தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி சாலையில் நின்றது. இதனால், அவ்வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 5 கிமீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

இaதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் லாரியில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘கோபசந்திரம் பகுதியில், மேம்பால பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement

Related News