தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலத்த காற்று, மழையால் ராகி அறுவடை பாதிப்பு

 

Advertisement

தேன்கனிக்கோட்டை, டிச.1: தேன்கனிக்கோட்டையில் பலத்த காற்று, மழையால் ராகி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அறுவடைக்காக வந்த இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் பகுதியில் கடந்த 15 நாட்களாக ராகி அறுவடை துவங்கி நடைபெற்று வருகிறது. கூலி ஆட்கள் பற்றாக்குறை மற்றும் யானைகள் தொந்தரவால், அறுவடை பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டு நெல் அறுவடைக்காக வரவழைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் ராகி அறுவடை செய்து வந்தனர். கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அறுவடை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர்.

இதுகுறித்து அறுவடை இயந்திரங்கள் ஓட்டும் டிரைவர்கள் கூறுகையில், ‘சேலம் மாவட்டம் ஆத்தூர், கடலூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவையில் சாகுபடி செய்த நெல் அறுவடை பொங்கல் முதல் துவங்கும். அதுவரை 100க்கும் மேற்பட்ட இயந்திரங்களுடன் கர்நாடக மாநிலம் கனகபுரா, மைசூரு, கொள்ளேகால், ஆறுவள்ளி, குடகு மாவட்டங்களில் முகாமிட்டு நெல் அறுவடை பணியில் ஈடுபடுவோம். மூன்று மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து நெல், ராகி அறுவடையை முடித்துக்கொண்டு பொங்கலுக்கு சொந்த ஊருக்கு திரும்பி விடுவோம். கடந்த ஒரு வார காலமாக புயல் -மழையால் தேன்கனிக்கோட்டை, தளி பகுதியில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடகை கிடைக்காமல் அறுவடையை நிறுத்தியுள்ளோம்.

 

Advertisement

Related News