தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்

கோவை, அக்.31: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ஒன்றிய அரசு 2020ம் ஆண்டு முதல் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பின் காரணமாக 5 மின்சார திருத்த மசோதாக்களை கைவிட்டது. தற்போது ஆறாவது முறையாக மின்சார திருத்த மசோதா -2025ஐ அறிமுகப்படுத்தி அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் கேட்டுள்ளது.

Advertisement

இந்த மசோதாவின் மூலமாக மானியங்கள், வேளாண் உரிமை மின்சார இணைப்புகள், வீடுகளுக்கான 100 யூனிட் மின்கட்டண சலுகை, விசைத்தறிகளுக்கான 750 யூனிட் மின்கட்டண சலுகை உள்ளிட்டவை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. மேலும் தற்போதுள்ள மின் கட்டணத்தை 80 சதவீதம் உயர்த்த வேண்டுமெனவும், தனியார் மின்சார நிறுவனங்கள் மின்சார வணிகத்தில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி குடும்பங்களையும், 23 லட்சம் விவசாயக் குடும்பங்களையும், 4 லட்சம் விசைத்தறியாளர்கள் குடும்பங்களையும் நேரடியாக பாதிக்கும் வகையில் உள்ளது. இம்மசோதா நிறைவேறினால் ஒவ்வொரு விவசாயியும் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.20 ஆயிரம் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும். இதனால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவார்கள். உணவு உற்பத்தி பாதிக்கப்படும். எனவே மின்சார சட்ட திருத்த மசோதா -2025ஐ திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News