தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் விடுமுறையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

கோவை, செப். 27: கோவை மாவட்டத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுத பூஜை தொடர் விடுமுறையொட்டி சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் அக்டோபர் 1-ம் தேதி ஆயுத பூஜை, 2-ம் தேதி காந்திஜெயந்தி, விஜயதசமி கொண்டாடப்பட இருப்பதால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

Advertisement

இதனால், பஸ் நிலையங்களில் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கோவையில் இருந்து சேலம், ஈரோடு, நீலகிரி, திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, காந்திபுரம் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து இன்றும், நாளையும் இரண்டு நாட்களும் மற்றும் 30-ம் தேதியும் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 110 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கூட்டம் அதிகமாக காணப்பட்டால் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement