தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநகராட்சி பள்ளி மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம்: 160 பேர் பயன்

கோவை, நவ. 21: கோவை டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது. இதனை மாநகர கல்வி அலுவலர் குணசேகரன் துவங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

Advertisement

வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவராமன் வரவேற்றார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் மூர்த்தி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சல், பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில், எலும்பியல் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், கண் பரிசோதகர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். இவர்கள் பிறந்தது முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மாற்றுத்திறன் அளவீடுகள் மதிப்பீடு செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

மேலும், புதிய தேசிய அடையாள அட்டை பெறவும், இலவச பஸ்பாஸ், ரயில் பாஸ் பெறவும் பரிந்துரை செய்தனர். இந்த முகாமில் மொத்தம் 160 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 23 பேருக்கு புதிதாக தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. 18 பேருக்கு ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி தனித்துவமான அடையாள அட்டைகள் புதுப்பித்து தரப்பட்டன. 20 பேர் புதிய ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி தனித்துவ அட்டைகள் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.

 

Advertisement