தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காளப்பட்டி, மருதமலை, இருகூரில் புதிய போலீஸ் ஸ்டேசன்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு

கோவை, ஆக. 20: தமிழகத்தின் தொழில் நகரமாக விளங்கும் கோவையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். இதுதவிர இங்குள்ள கல்வி நிலையங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர்.

Advertisement

கோவை மாநகரில் 20 சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள், 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், 2 போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கோவை மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தற்போது உள்ள போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கை போதாது என்றும், கூடுதல் போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து சுந்தராபுரம், கரும்புகடை, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இதுதவிர துடியலூர், வடவள்ளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது கோவை மாநகருக்கு காளப்பட்டி, இருகூர், மருதமலை ஆகிய பகுதிகளை மையமாகக்கொண்டு புதிய போலீஸ்நிலையம் அமைக்க கோவை மாநகர போலீசார் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

 

Advertisement