தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கவுண்டம்பாளையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை

பெ.நா.பாளையம், நவ.18: கவுண்டம்பாளையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள கிரி நகர், பாலாஜி கார்டன் 1-வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவர் கடந்த 15 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். இந்நிலையில் வீடு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். உள்ளே இருந்த பீரோ பூட்டையும் உடைத்து சில்வர் பொருட்கள் மற்றும் பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளை அடித்து தப்பினர். அதேபோல கவுண்டம்பாளையம் ராஜன் நகர் 1-வது தெருவில் ஸ்டான்லி (48) என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார்.

Advertisement

அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் 20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு தப்பி விட்டனர். இந்த 2 கொள்ளை சம்பவம் குறித்தும் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் கொள்ளை நடந்த வீட்டுக்குள் கிடைத்த கைரேகை பதிவுகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளான இரண்டு இடங்களிலும் ஒரே நாளில் இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

Advertisement