தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை கலெக்டர் அலுவலகத்தில் குரங்கு அட்டகாசம்

கோவை, நவ. 13: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்த குரங்கினை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குரங்கு ஒன்று நேற்று உணவு தேடி புகுந்தது. பின்னர், கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சிறுதானிய உணவகம் என்ற மகளிர் உணவக பகுதிக்குள் நுழைந்த அந்த குரங்கு, அங்கு உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மூதாட்டியின் தட்டில் இருந்த சாப்பாத்தியை பிடுங்கி தின்றது.

Advertisement

தொடர்ந்து, அங்கிருந்த குப்பைகளில் இருந்த உணவை தின்றது. அப்போது, அதன் அருகே சென்ற ஊழியர்களை ஆக்ரோஷமாக முறைத்துக்கொண்டு உணவுப் பொருட்களை உண்டது. இந்நிலையில், அங்கு உணவு அருந்து வந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் குரங்கு உணவுப்பொருள்களை பிடுங்கி தின்றுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் குரங்கு நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் அட்டகாசம் செய்த குரங்கை பிடிக்க கூண்டு வைத்தனர். அந்த கூண்டினுள் கொய்யா பழங்களை வைத்து குரங்கை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்து அட்டகாசம் செய்த குரங்கால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement