தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநகராட்சி திட்டங்களை கேட்டறிந்த ஜெர்மனி மாணவர்கள்

கோவை, செப். 10: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர்கள் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை நேற்று நேரில் சந்தித்து மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர். கோவை தனியார் நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த மாணவர்களை 2025ம் ஆண்டுக்கான இந்திய வெளிநாட்டுப் படிப்பு திட்டத்தை அறிய ஏற்பாடு செய்துள்ளது. இதில் இந்தியாவின் கலாசாரம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் வணிக நடைமுறைகள் பற்றிய வெளிப்பாட்டை வழங்குவதற்கும், நாட்டின் பல்வேறு மரபுகள், மொழிகள் மற்றும் விழாக்களில் அவர்களை ஈடுபடுத்துவதற்கும், பாரம்பரியம் மற்றும் சமூக மதிப்புகள் பற்றிய வளமான புரிதலை வளர்ப்பதற்கும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக ஜெர்மனியை சேர்ந்த மாணவர்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கோவை மாநகராட்சியின் நிர்வாகம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கமிஷனரிடம் கேட்டறிந்தனர். முன்னதாக, மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம், பெரியகுளம் மற்றும் கிருஷ்ணம்பதி குளம் ஆகிய குளங்களையும் ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

 

Advertisement

Related News