தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்னூர் அருகே பரபரப்பு பிக்கப் வாகனத்தின் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலி

அன்னூர், நவ.6: அன்னூர் கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் பிக்கப் வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் வாலிபர் பலியானார். இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயம் அடைந்தனர். ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்குமார் (25). இவர் புளியம்பட்டியை சேர்ந்த மதன்குமார் என்பவரிடம் பிக்கப் வாகன ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். சதீஷ்குமார் சத்தியமங்கலத்தில் இருந்து வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு சென்று வாழைக்காய் லோடை இறக்கியுள்ளார். பின்னர் அன்னூர் வழியாக புளியம்பட்டி திரும்பி உள்ளார்.

Advertisement

அப்போது அன்னூர் அருகே கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் அல்லிக்குளம், குளம் பகுதியில் சென்றபோது சத்தியில் இருந்து கோவை நோக்கி வந்த பாயிண்ட் - பாயிண்ட் அரசு பேருந்து பிக்கப் வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சதீஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகள் லேசான காயம் அடைந்த நிலையில் அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். இதனையடுத்து கோவை மண்டல பொது மேலாளர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து கேட்டு அறிந்தார்.

இதுகுறித்து அன்னூர் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வழக்குஒபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பிக்கப் வாகனம் மற்றும் அரசு பேருந்தை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிரேன் மூலமாக அகற்றி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

 

Advertisement