தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கல்லூரி மாணவர்கள் அறைக்குள் புகுந்து செல்போன், லேப்டாப் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு கைவரிசை

கோவை, ஆக 6: கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர்கள் அறைக்குள் புகுந்து செல்போன், லேப்டாப்பை பறித்து தப்பிய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கேரளாவை சேர்ந்தவர் ஆதித்ய நாராயணன் (18). இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அறையில், நண்பர்கள் ஹரி பெருமாள், ஸ்ரீஹரி ஆகியோரும் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அனைவரும் அறையில் படித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் திடீரென அறைக்குள் புகுந்தனர்.

4 பேரும் சேர்ந்து ஆதித்ய நாராயணன் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டி 3 செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த ஆதித்ய நாராயணன் மற்றும் நண்பர்கள் அக்கும்பலை விரட்டி சென்றனர். அதற்கு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ஆதித்ய நாராயணன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.