தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலி மதுபாட்டில்களை வாங்க மறுத்து டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை,அக்.4: பொது இடங்களில் மதுபாட்டில்கள் வீசப்படுவதை தவிர்க்கும் வகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டி ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அந்த பாட்டில்களை திரும்ப தரும்போது ரூ.10 திரும்ப தரப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த திட்டத்தின்படி காலி மதுபாட்டில்களை வாங்கமாட்டோம் எனக்கூறி, கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கிடங்கு அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது, ‘‘காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தினால் கூடுதல் பணிசுமை ஏற்படுகிறது.

அதனால் மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டமாட்டோம். காலி பாட்டில்களை வாங்க மாட்டோம்.டாஸ்மாக் நிர்வாகமே ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்க வேண்டும். காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

Advertisement

Related News