தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மேட்டுப்பாளையம், நவ.11: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் மைய பகுதியாகவும், தமிழக, கேரள, கர்நாடக மாநில எல்லை பகுதியாகவும் மேட்டுப்பாளையம் இருந்து வருகிறது. இதேபோல் பணி நிமித்தமாகவும், பள்ளி கல்லூரி செல்வதற்காகவும் நாள்தோறும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பேருந்து நிலையத்தின் ஒருபுறம் மட்டுமே பயணிகள் நின்று வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பேருந்து நிலையத்தில் பயணிகளின் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரிகள் பலர் கடைகளை அமைத்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் நடக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ‘தினகரன்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் நேற்று பேருந்து நிலையத்தில் பயணிகளின் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தினர். தற்போது நடைபாதை பயணிகள் நிற்பதற்கு விசாலமான இடமாக மாறி உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement