தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடத்தல்காரர்கள் ஒருவேளை மட்டுமே உணவு கொடுத்தனர்: மீட்கப்பட்ட தொழிலதிபர் வேதனை

மதுரை, ஏப். 25: தன்னை கடத்திச்சென்றவர்கள், ஒருவேளை உணவு மட்டுமே கொடுத்ததாக மீட்கப்பட்ட தொழிலதிபர் தெரிவித்துள்ளார். மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் சுந்தரம்(58). இவருக்கு சொந்தமாக திண்டுக்கல்லில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அபகரிக்க முயன்ற திண்டுக்கல்லை சேர்ந்த மரியராஜ்(70) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சுந்தரத்தை கடந்த 6ம் தேதி மதுரையிலிருந்து காரில் கடத்தினார். போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றினர். நாசிக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு காரிலேயே அவரை வைத்துக்கொண்டு சுற்றியுள்ளனர்.

Advertisement

போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து, காரிலேயே மதுரைக்கு திரும்பி வந்தனர். அப்போது ரிங்ரோடு போலீசாரிடம் சிக்கினர். தொழிலதிபர் சுந்தரத்தை மீட்ட போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர். இதனிடையே மீட்கப்பட்ட தொழிலதிபர் சுந்தரம் கூறும்போது, ‘‘மதுரையிலிருந்து என்னை கடத்திச்சென்ற கும்பல், பல மாநிலங்களுக்கு கொண்டு சென்றனர். ஒரே இடத்தில் இல்லாமல் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு காரிலேயே சுற்றினர். ஒரே ஒரு ஆடை மட்டுமே வாங்கி கொடுத்தனர். தினந்தோறும் ஒருவேளை மட்டுமே உணவு வாங்கி கொடுத்து கொடுமைப்படுத்தினர்’’ என்றார்.

Advertisement

Related News