தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காசிமேடு அருகே மீன் பிடித்தபோது நாகப்பட்டினத்தை சேர்ந்த 90 மீனவர்கள் சிறைபிடிப்பு

Advertisement

திருவொற்றியூர்: காசிமேடு பகுதியில் மீன் பிடித்தபோது நாகப்பட்டினத்தை சேர்ந்த 90 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 90 மீனவர்கள் 8 விசைப்படகுகளில், கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது கடலில் சீற்றம் அதிகம் காணப்பட்டது. மேலும் நீரோட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காசிமேடு பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த காசிமேடு மீனவர்கள், 90 பேரையும் கரைக்கு அழைத்து வந்து அவர்களிடம் இருந்த 8 ஜிபிஎஸ் கருவிகளை பறிமுதல் செய்து, மீன்பிடி உதவி இயக்குனர் அஜய் ஆனந்த்திடம் இதுகுறித்து தகவல் கூறினர்.

அதன்பேரில் நாகப்பட்டினம் மீனவ சங்க தலைவருக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வரவைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் இனி காசிமேடு பகுதிக்கு மீன் பிடிக்க வரமாட்டோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு 8 ஜிபிஎஸ் கருவிகளையும் மீண்டும் பெற்றுக்கொண்டனர். மேலும் கடலில் சீற்றத்தின் அளவு குறையாததால் 2 நாள் இங்கேயே தங்கிவிட்டுச் செல்வதாக நாகப்பட்டினம் மீனவர்கள் கூறினர். அதற்கு காசிமேடு மீனவர்கள் ஒப்புக் கொண்டனர்.

Advertisement

Related News