தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உப்பிடமங்கலத்தில் அரசு கிளை நூலக கூடுதல் கட்டிடம் திறப்பு விழா

கிருஷ்ணராயபுரம், செப்.27: கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்கலத்தில் அரசு கிளை நூலகம் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ சிவகாமசுந்தரி, நூலக உறுப்பினர் அட்டைகள் வழங்கினார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்கலத்தில் பள்ளிக்கல்வித்துறை பொது நூலகம் திட்ட நிதி மூலம் ரூ.22 லட்சம் மதிப்பில் அரசு கிளை நூலக முதல் தளத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு அதனை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

Advertisement

கிளை நூலகம் கூடுதல் கட்டிடம் திறப்பு விழாவில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, பள்ளி மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை,நோட்டு புத்தகம் மற்றும் எழுதுகோல் வழங்கினார். நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ரகுநாதன், உப்பிடமங்கலம் பேரூர் கழகச் செயலாளர் தங்கராஜ் , பேரூராட்சி திவ்யா தங்கராஜ், துணைத் தலைவர் பாக்கியலட்சுமி, கருப்பண்ணன், அரசு அலுவலர்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement