கரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் 24.1 செ.மீ மழை பதிவு
கரூர், நவ. 25: கருர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் 24.1 செ.மீ மழை பெய்தாக பதிவு. க.பரமத்தியில் அதிகமாக பெழிவு. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கருர் மாவட்டம் முழுதும் 240.90 மிமீ மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து கரூரை குளிர்வித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக கரூர் மாவட்டம் முழுதும் விட்டு விட்டு மழை பெய்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்து கரூரை குளிர்வித்து வருகிறது. ஆண்டின் சராசரி மழையை பெற மேலும் அதிகளவு கரூர் மாவட்டம் மழையை பெற வேண்டும் என்ற நிலையில், இதுநாள் வரை குறைந்த அளவில்தான் மழை பெய்துள்ளது.
எனவே, இனி வரும் 40 நாட்களிலாவது கரூர் மாவட்டம் கூடுதல் மழையை பெற்று ஆண்டு சராசரி மழையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 21ம்தேதி இரவு முதல் 22ம்தேதி காலை வரை 149.30 மிமீட்டரும், 22ம்தேதி இரவு முதல் 23ம்தேதி காலை வரை 113.70 மிமீட்டரும் என்ற அளவில் மழை பெய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கரூர் 22மிமீ, அரவக்குறிச்சி 22 மிமீ, அணைப்பாளையம் 19 மிமீ, க.பரமத்தி 32.20 மிமீ, குளித்தலை 9 மிமீ, கிருஷ்ணராயபுரம் 16.50 மாயனூர் 20 மிமீ, பஞ்சப்பட்டி 12.40 மிமீ, கடவூர் 12 மிமீ, பாலவிடுதி 10 மிமீ, மயிலம்பட்டி 12 மிமீ என 240.90 மிமீ அளவில் மழை பெய்திருந்தது.தொடர்ந்து, மூன்று நாட்களாக கருர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து குளிர்வித்து வரும் நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை கரூர் மாவட்டம் முழுதும் விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலை வரை ஆண்டின் சராசரி மழையளவு குறைவாக உள்ள நிலையில், இனி வரும் நாட்களில் கரூர் மாவட்டம் அதிகளவு மழையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.