தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் 24.1 செ.மீ மழை பதிவு

 

Advertisement

கரூர், நவ. 25: கருர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் 24.1 செ.மீ மழை பெய்தாக பதிவு. க.பரமத்தியில் அதிகமாக பெழிவு. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கருர் மாவட்டம் முழுதும் 240.90 மிமீ மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து கரூரை குளிர்வித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக கரூர் மாவட்டம் முழுதும் விட்டு விட்டு மழை பெய்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்து கரூரை குளிர்வித்து வருகிறது. ஆண்டின் சராசரி மழையை பெற மேலும் அதிகளவு கரூர் மாவட்டம் மழையை பெற வேண்டும் என்ற நிலையில், இதுநாள் வரை குறைந்த அளவில்தான் மழை பெய்துள்ளது.

எனவே, இனி வரும் 40 நாட்களிலாவது கரூர் மாவட்டம் கூடுதல் மழையை பெற்று ஆண்டு சராசரி மழையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 21ம்தேதி இரவு முதல் 22ம்தேதி காலை வரை 149.30 மிமீட்டரும், 22ம்தேதி இரவு முதல் 23ம்தேதி காலை வரை 113.70 மிமீட்டரும் என்ற அளவில் மழை பெய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கரூர் 22மிமீ, அரவக்குறிச்சி 22 மிமீ, அணைப்பாளையம் 19 மிமீ, க.பரமத்தி 32.20 மிமீ, குளித்தலை 9 மிமீ, கிருஷ்ணராயபுரம் 16.50 மாயனூர் 20 மிமீ, பஞ்சப்பட்டி 12.40 மிமீ, கடவூர் 12 மிமீ, பாலவிடுதி 10 மிமீ, மயிலம்பட்டி 12 மிமீ என 240.90 மிமீ அளவில் மழை பெய்திருந்தது.தொடர்ந்து, மூன்று நாட்களாக கருர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து குளிர்வித்து வரும் நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை கரூர் மாவட்டம் முழுதும் விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலை வரை ஆண்டின் சராசரி மழையளவு குறைவாக உள்ள நிலையில், இனி வரும் நாட்களில் கரூர் மாவட்டம் அதிகளவு மழையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Related News