தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளித்தலை சுங்ககேட் பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி: இலவச ஹெல்மெட்களை டிஎஸ்பி வழங்கினார்

குளித்தலை, ஆக.18: குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் சுங்ககேட் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக ஹெல்மெட்களை வழங்கினார். கரூர் மாவட்டம், குளித்தலை சுங்க கேட்டில் காவல் துறையின் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

அப்போது அவர் பேசுகையில், சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தலையில் அடிபட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், ஹெல்மெட் அணிவதால் 74 சதவீதம் தலைக்காயங்கள் ஏற்படாமல் உயிரிழப்புகள் தடுக்கப்படுவதாகவும், எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் தவறாமல் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அதுகுறித்து விழிப்புணர்வு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தினந்தோறும் இப்பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்டுகள் வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் ஹெல்மெட் இல்லாத வாகன ஓட்டிகளுக்கும் இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் பலரும் உடனிருந்தனர்.

 

Advertisement