தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர்-ராயனூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

கரூர், செப். 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் சாலையில் கனரக வாகனம் உட்பட பல்வேறு வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கரூர் மாநகர பகுதிகளில் இருந்து ராயனூர், திண்டுக்கல், திருச்சி மற்றும் மதுரை பைபாஸ் சாலைகள், கோடங்கிப்பட்டி, ஈசநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருமாநிலையூர், ராயனூர் வழியாக சென்று வருகிறது.

Advertisement

இந்த சாலையில் திருமாநிலையூர் பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை சாலை மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து எளிதாக நடைபெறாமல் அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டு வரும் சூழல் உள்ளது.

இந்நிலையில், குறுகிய சாலையில், ஒரு சில கனரக வாகனங்கள் வந்து செல்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற நிகழ்வுகளை பார்வையிட்டு, மற்ற வாகன போக்குவரத்துக்கு இடையூறு இன்றி கனரக வாகனங்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுகக் வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர்.

 

Advertisement

Related News