தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம்- மைலம்பட்டி சாலை விரிவாக்கப்பணி

கிருஷ்ணராயபுரம், நவ. 5: கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் மகாதானபுரம் முதல் மைலம்பட்டி வரை செல்லும் சாலையில் வேலாயுதம்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறுகிறது. நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் கரூர் மாவட்டம் மற்றும் கோட்டம், கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம், மற்றும் பிரிவு மாவட்ட முக்கிய சாலையான மகாதானபுரம் முதல் மைலம்பட்டி வரை செல்லும் சாலையில் வேலாயுதம்பாளையம் அருகில் கிமீ. 23/4 25/0 வரை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

Advertisement

எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக நெடுஞ்சாலைத்துறைச் சார்பில் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இடை வழித்தடத்திலிருந்து (5.30 மீட்டர்) இரு வழித்தடமாக (7.00 மீட்டர்) அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணியானது தொடங்கி ஜெசிபி இயந்திரம் மூலம் சாலை அகலப்படுத்தும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதனை கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம் உதவிக்கோட்ட பொறியாளர் கர்ணன், மற்றும் உதவிப்பொறியாளர்கள் அசாருதீன் ஆய்வு செய்தனர். உதவியாளர் கண்ணதாசன் உடன் இருந்தனர்.

 

Advertisement