தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூரில் புனித தெரசா ஆலயத்தின் 95ம் ஆண்டு தேர் திருவிழா கொடியேற்றம்

கரூர், அக். 4: கரூரில் புகழ்பெற்ற புனித தெரசா ஆலயத்தின் 95ம் ஆண்டு தேர் திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு பிரதட்சணம் சாலையில் புனித தெரசா ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இவ் ஆலயத்தின் 95ம் ஆண்டு தேர் திருவிழா வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது. பங்குத் தந்தை லாரன்ஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் பங்கு மக்களும், பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

அதனை தொடர்ந்து புனித தெரசாள் திருவுறுவம் பொறிக்கப்பட்ட கொடியினை ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனை தொடர்ந்து பங்குத் தந்தையர்கள் கொடிக்கு ஜெபம் செய்து கல் கொடிமரத்தில் ஏற்றி வைத்தனர்.  பங்கு மக்கள் வண்ண பலூன்களை பறக்க விட்டும், பட்டாசுகள் வெடித்தும், கைகளை தட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வரும் 12ம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது.

 

Advertisement

Related News