லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது
Advertisement
அரவக்குறிச்சி, அக். 28: அரவக்குறிச்சி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி விற்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி காவல் ஆய்வாளர் ராஜசேர்வை தலைமையிலான போலீஸ் குழு ஈசநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, ஈசநத்தம் கஸ்பா தெருவைச் சேர்ந்த கண்ணன் (60) தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்ய்யப்பட்டார். முதியவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Advertisement