தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கை நடவு பணி தீவிரம்: தமிழ்நாடு காகித ஆலை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

வேலாயுதம்பாளையம், நவ.11: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மாபெரும் இலவசகண் பரிசோதனை முகாமில் 633 பேர் பயன்பெற்றனர்.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மற்றும் மதுரை அரவிந்த் மருத்துவமனை இணைந்து கரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் உதவியுடன் காகித ஆலையைச் சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி. பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், ந.புகழூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு உள்ளடங்கிய மக்களுக்காக இலவச கண் சிகிச்சை முகாமினை காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. இம்முகாமில் மொத்தம் 633 பேர் கண் பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.

Advertisement

இந்த இலவச கண் பரிசோதனை முகாமினை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் (இயக்கம்), ராஜலிங்கம் மற்றும் மருத்துவக் குழுவினர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இம்முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை. வெள்ளெழுத்து,கண் விழித்திரையில் பார்வையிழப்பு (சர்க்கரை நோய் காரணமாக), பிறவி கண்புரை, கண்நீர் அழுத்த நோய், கண் எரிச்சல், கண் வலி, கண்ணின் கருவிழியில் புண். கண் பார்வை குறைபாடு. மற்றும் இதர கண் சம்பந்தமான நோய்கள் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டார்கள். மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ள 345 ஏழை எளிய மக்களுக்கு ரூ.93,000/- மதிப்பிலான மூக்கு கண்ணாடிகள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது.இம்முகாமிற்கு கிராம பகுதிகளிலிருந்து கண் குறைபாடு உள்ளவர்களை அழைத்து வர ஆலை நிர்வாகம் புன்னம்சத்திரம், தளவாபாளையம், நொய்யல் குறுக்குசாலை, வேலாயுதம்பாளையம் மற்றும் ஓனவாக்கல்மேடு ஆகிய ஐந்து வழித்தடங்களில் பேருந்து வசதியுடன் ஏற்பாடு செய்திருந்தது.

Advertisement

Related News