வரும் 5 ஆம் தேதி டாஸ்மாக் விடுமுறை
கரூர், செப். 3: நபிகள் நாயகம் பிறந்த தினத்தில் டாஸ்மாக் விடுமுறையளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: எதிர்வரும் 5.9.2025ம் தேதி, நபிகள் நாயகம் பிறந்த தினம்’ என்பதால், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மற்றும் உரிமம் பெற்ற ஓட்டல்கள் உலர்தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், டாஸ்மாக் கடைகள், உரிமம் கூடங்கள் மூடவேண்டும். அன்றைய தினங்களில் விற்பனை ஏதும் செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்படுகிறது. மேற்படி தினத்தன்று விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.