தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடக துணை முதல்வர் சுவாமி தரிசனம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் என பெருமிதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, அக்.8: அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அவரது மனைவி உஷா சிவக்குமாருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோயில் பே கோபுரம் வழியாக கோயிலுக்கு வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை, கோயில் இணை ஆணையர் ஜோதி உள்ளிட்டோர் தரிசனத்துக்கு அழைத்து வந்தனர். சம்மந்த விநாயகர் சன்னதியில் வழிபட்ட பிறகு, சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் சிறப்பு தரிசனம் செய்து முடித்ததும், அம்மன் சன்னதி எதிரில் கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

பின்னர், கோயில் 4ம் பிரகாரத்தில் அமைந்துள்ள காலபைரவர் சன்னதியில், வழிபட்டார். கர்நாடக மாநில துணை முதல்வருடன், திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், நகர செயலாளர் வெற்றிசெல்வன் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஏற்கனவே கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது வந்திருந்தேன். தற்போது, மீண்டும் கோயிலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்தமுறை வந்ததைவிட, இந்தமுறை பார்க்கும்போது கோயிலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் கட்டுமானமும், கலை நுட்பமும், நம்முடைய கலாசாராத்தை வெளிப்படுத்தும் விதமும் வியக்கத்தக்க வகையில் உள்ளது என்றார். அதைத்தொடர்ந்து, நதிகள் அனைத்தும் தேசியமாக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கடலில் வீணாக கலக்கும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கர்நாடக மாநில அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த அவர், கோயிலில் தரிசனம் செய்ய வந்திருக்கிறேன். அரசியல் கேள்விகள் வேண்டாம் என தெரிவித்தார். முன்னதாக, கர்நாடகாவில் இருந்து ெஹலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை வந்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், கிரிவலப்பாதையில் தனியாருக்கு சொந்தமான ஹெலிபேடில் தரையிறங்கினார். அங்கிருந்து, காரில் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்தார்.

Advertisement

Related News