தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வரின் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி காரமடை அரசு பள்ளி மாணவி சாதனை

 

Advertisement

காரமடை, ஜூன் 14: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு\” நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2024-2025ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு கடந்த ஜன.25ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வினை தமிழகம் முழுவதிலும் இருந்து 1,43,351 மாணவ, மாணவியர்கள் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில், காரமடை அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி பவிஷ்ணி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தமிழகம் முழுவதும் இருந்து தேர்வான 500 மாணவிகளில் 316வது இடத்தையும், கோவை மாவட்டத்தில் இருந்து தேர்வான 19 மாணவிகளில் ஒருவராகவும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.இதன்மூலம், இளங்கலை பட்டப்படிப்பு வரை இந்த மாணவி கல்விக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் அரசின் உதவித்தொகை பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Related News