தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேயை விரட்டவில்லை எனக்கூறி கோயில் பூசாரி மீது சரமாரி தாக்குதல் பாலக்காடு அருகே பரபரப்பு

திருவனந்தபுரம், ஆக. 27: கேரள மாநிலம் பாலக்காடு அருகே பூஜை நடத்தியும் பெண்ணுக்கு பிடித்த போய் போகவில்லை என்று கூறி கோயில் பூசாரியை உறவினர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த பூசாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிற்றிலஞ்சேரி அருகே இரட்டக்குளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(54). இவரது உறவினரான ஒரு பெண்ணுக்கு சமீபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டது. இந்தப் பெண்ணுக்கு பேய் பிடித்து இருப்பதாக கருதிய குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள வீழுமலை கோயில் பூசாரி சுரேஷிடம் அழைத்துச் சென்றனர்.

Advertisement

அவரும் பேயை விரட்ட பூஜை செய்வதாக கூறினார். அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூஜை நடத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அந்தப் பெண்ணுக்கு நோய் குணமாகவில்லை. இதனால் கோபம் அடைந்த கிருஷ்ணன், அவரது மகன்களான ரெஜின்(24), விபின்(21), உறவினரான பரமன் (51) ஆகியோர் பூசாரி சுரேஷ் தங்கி இருந்த ஆசிரமத்திற்கு சென்று பேய் ஏன் போகவில்லை என்று கூறி தகராறு செய்தனர். அப்போது 4 பேரும் சேர்ந்து பூசாரியை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் ஆலத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே பூசாரியும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து தங்களை தாக்கியதாக கூறி கிருஷ்ணன் மற்றும் அவரது மகன்கள் இருவரும் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News