தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய பாரத எழுத்தறிவு திட்ட 2ம் கட்டத் தேர்வுகள் டிச.14ல் நடக்கிறது

நாகர்கோவில், நவ.26 : புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 2ம் கட்ட தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி நடக்கிறது.தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதோருக்கான புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் 2025-26ம் ஆண்டு செயல்பாடுகளின் இரண்டாம் கட்டமாக, கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத் தேர்வு 2025 டிசம்பர் 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட உள்ளது. 2025-26ம் ஆண்டில் கண்டறியப்பட்ட 9 லட்சத்து 63 ஆயிரத்து 171 பேர் இத்தேர்வில் பங்கேற்க உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள 37 ஆயிரத்து 75 கற்போர் எழுத்தறிவு மையங்களில் இத்தேர்வு நடைபெறும். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் ஜூன் 15, 2025 அன்று 5 லட்சத்து 37 ஆயிரத்து 876 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கு தன்னார்வலர்களின் உதவியுடன் 200 மணி நேரக் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் ஜூலை முதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement