தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்ரமிப்பு கடைகள் மீண்டும் அகற்றம் தீக்குளிக்க போவதாக வியாபாரி மிரட்டியதால் பரபரப்பு

கன்னியாகுமரி, நவ. 26: கன்னியாகுமரி கடற்கரை சாலையின் இருபுறமும் காந்தி மண்டபம் முதல் காட்சி கோபுரம் வரை நடைபாதையை ஆக்ரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் உள்ள நடைபாதைகளில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த ஆக்ரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி உத்தரவின்பேரில், நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் அப்துல் காதர், பொறியாளர் பழனி, சுகாதார ஆய்வாளர் அந்தோணி முன்னிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டபம், காட்சி கோபுரம் ஆகிய இடங்களில் உள்ள நடைபாதைகளில் இருந்த ஆக்ரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

Advertisement

இந்நிலையில் கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயசந்திரன், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் நேற்றும் ஆக்ரமிப்புகளை அகற்றினர். அப்போது நடைபாதை வியாபாரிகள், பாசி, மாலை, சங்கு உள்ளிட்ட பொருட்களை விற்பவர்கள் கடைகளை அகற்றினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு வியாபாரி தனது கடையை அகற்றினால் தீக்குளிப்பேன் என மிரட்டல் விடுத்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்ரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Advertisement