தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவிலில் ஸ்கூட்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி லோடுமேன் படுகாயம்

நாகர்கோவில், அக்.23: நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (47). லோடுமேன். கடந்த 20ம்தேதி (தீபாவளி அன்று), இவர் தனது ஸ்கூட்டரில் நண்பர் ஒருவரை பின்னால் அமர வைத்து, பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மேம்பாலத்தின் கீழ் உள்ள தூண் வழியாக வலது பக்கம் திரும்ப முயலும் போது பின்னால் வந்த தனியார் ஆம்புலன்ஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, எஸ்.எஸ்.ஐ. விவின்குமார் விசாரணை நடத்தி ஆம்புலன்ஸ் டிரைவர் ஈசாந்திமங்கலத்தை சேர்ந்த அர்ஜூனன் (34) மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement