தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் வெள்ளி வாகனங்கள் புதுப்பிக்கும் பணி தொடங்கியது

சுசீந்திரம்.நவ.19: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவை முன்னிட்டு தினமும் விதவிதமான வெள்ளி வாகனங்களில் உற்சவ மூர்த்தி பவனி நடைபெறும். இவற்றில் பல வாகனங்கள் சேதமடைந்து உள்ள நிலையில், மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்த கைலாசநாதர் வாகனம், கமல வாகனம், சேஷ வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், கருட வாகனம், பூத வாகனம் ஆகிய 7 வெள்ளி வாகனங்களையும் சீரமைக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கைலாச பர்வத வாகனத்தை சுசீந்திரத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் உபயத்தின் மூலம் ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் கோயிலில் துவங்கியது. கோயில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி புதுப்பிக்கும் பணியை துவக்கி வைத்தார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவப்பிரசாத் முன்னிலை வகித்தார். அரசு ஸ்தபதி மணிகண்ட ராஜா வெள்ளி வாகனத்தை புதுப்பிக்கும் பணியை தொடங்கினார். நிகழ்ச்சியில் கோயில் மேலாளர் ஆறுமுகம்தரன், கோயில் கணக்கர் கண்ணன் மற்றும் கோயில் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Advertisement

Advertisement