தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

களியக்காவிளையில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சிறப்பு தகவல் மையம் திறப்பு

திருவட்டார், நவ.19: சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக குமரி மாவட்ட அறநிலையத் துறை சார்பில் தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலிருந்தும் சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் செல்லும் ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் களியக்காவிளை வழியாக சென்று வருகின்றனா். இதே போன்று குமுளி, புளியரை பகுதி வழியாகவும் சபரி மலைக்கு செல்கிறார்கள். குமரி வழியாக வரும் பக்தர்கள் வசதிக்காக களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மையத்தை குழித்துறை தேவஸ்சம் கண்காணிப்பாளர் சிவகுமார் திறந்து வைத்தார். இங்கு, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அறநிலையத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி புரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் மையம் 2026 ஜனவரி 20ம் தேதி வரை செயல்படும் என இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement